Wednesday, March 2, 2011

என் வந்தனம்



கம்பனையும் கவிராயரையும்

காலமெல்லாம் காணச்செய்யும் கலைப்பணியில் ,

கணக்கில்லா கவிதைகளை கண்ணிமைக்கும் நேரத்திலே கணிணி

மூலம் காட்டி வரும் கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்

வாசத்தில் வந்தமர்ந்த வண்டு நான் .

என்னைவரவேற்று வாழ்த்துரைத்து

வலைதளத்தை
வழி நடத்த

வணக்கத்துடன் வேண்டுகிறேன்.

அன்புடன் கணேஷ்.

.


7 comments:

  1. //கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்
    வாசத்தில் வந்தமர்ந்த வண்டு நான்.//

    ஆஹா, அறிமுகத்திலேயே அசத்தி விட்டீர்கள்.

    தேனுண்ட வண்டு போலவே மயக்கத்தில் நானும் தங்கள் கவிதையைப் படித்ததும்.

    வாழ்த்துக்கள். நிறைய சிந்தியுங்கள். நிறைய பதிவு செய்யுங்கள். அவை தேனாகப் பாயட்டும் எங்கள் செவிகளில்.

    வண்டே! தொடர்ந்து தேனாறு பாயட்டும்.

    ReplyDelete
  2. நண்பரே!
    word verification என்பதை தயவுசெய்து நீக்கிவிடவும்.
    பின்னூட்டம் கொடுக்க விரும்புபவர்களுக்கு அது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி திரு வை.கோ அவர்களே ,
    திருத்தம் செய்து விட்டேன்.

    ReplyDelete
  4. நான் பார்த்தவரை சிவகுமரன் & ரமணி
    நல்ல தரமான வார்த்தைப் பிரயோகங்களுடன், சிந்திக்க வைக்கும் கவிதைகள் படைக்கின்றனர். அடுத்ததாக எல்.கே என்று ஒருவர் எனக்கு ஏதோ 75% ரசிக்கும் படி எழுதுகிறார்.

    http://sivakumarankavithaikal.blogspot.com
    http://yaathoramani.blogspot.com
    http://kavisolai.blogspot.com

    உனக்கு இவர்களின் கவிதைகளைப் படித்தால் மேலும் சிறப்பாக எழுத உதவியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பதிவுலகிற்கு தங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்
    தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
    அன்புடன்...

    ReplyDelete
  6. ஊக்குவித்தமைக்கு நன்றி! திரு ரமணி அவர்களே .

    அன்புடன் ..

    ReplyDelete
  7. பதிவுலக வருகைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete