Tuesday, March 8, 2011

வலி


கால் வலித்தது ...

காலை காட்சி கண்டு விட்டு

கடைத் தெருவை கடக்கையிலே

கால்கள் வலித்தன .

கீச்சொலி யில் கடந்து சென்ற

வாகனத்தை கை தட்டி அழைத்தேன்.

ஏ ஏ ஏய்... ரிக் ஷா... !!
பணிக்கர் கடைக்கு பக்கத்து சந்து ...

பணித்து விட்டு பதிலுக்குக் காத்திராமல்

பஞ்சு இருக்கையிலே பதிந்து விட்டேன்.

கால் நீட்டி கண் அயரும் வேளையிலே

கவனித்தேன் கண்ணில் பட்ட காலை .

ஓட்டியவனின் மரக் கால் !!
...
....

மனம் வலித்தது .

கண்கள் பனித்தன .

Wednesday, March 2, 2011

என் வந்தனம்



கம்பனையும் கவிராயரையும்

காலமெல்லாம் காணச்செய்யும் கலைப்பணியில் ,

கணக்கில்லா கவிதைகளை கண்ணிமைக்கும் நேரத்திலே கணிணி

மூலம் காட்டி வரும் கவிஞர்கள் தொடுத்த வலைப் பூக்களின்

வாசத்தில் வந்தமர்ந்த வண்டு நான் .

என்னைவரவேற்று வாழ்த்துரைத்து

வலைதளத்தை
வழி நடத்த

வணக்கத்துடன் வேண்டுகிறேன்.

அன்புடன் கணேஷ்.

.